நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வெடித்து விபத்து: நான்கு பேர் பலி

December 31, 2022

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வெடித்து விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார். இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகள் அதிகாலை 3 மணிக்கு திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமாகியுள்ளது. அந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்த மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் […]

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வெடித்து விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக் குமார். இவர் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகள் அதிகாலை 3 மணிக்கு திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமாகியுள்ளது. அந்த வீட்டிற்கு அருகே வசித்து வந்த மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu