டெல்லியில் பட்டாசுக்கு டிசம்பர் வரை தடை: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய்

September 7, 2022

டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்குகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவை டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த காற்று மாசை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் காற்று மாசை கட்டுப்படுத்த […]

டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே காற்று மாசு அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி விளங்குகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவை டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த காற்று மாசை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் காற்று மாசை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் டெல்லியில் பெரும்பாலானோர் நுரையீரல் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு மேலும் பல மடங்கு அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க மற்றும் சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்கனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu