கேரள மாநிலம் வயநாடு அருகே துப்பாக்கி சூடு

April 30, 2024

கேரள மாநிலம் வயநாடு அருகே நான்கு மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்து வாக்களிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்து சென்றனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதால் தண்டர்போல்ட் அதிரடி படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அதிரடி படையினர் கண்காணிப்பை மீறி கடந்த 24 […]

கேரள மாநிலம் வயநாடு அருகே நான்கு மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் வந்து வாக்களிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்து சென்றனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதால் தண்டர்போல்ட் அதிரடி படையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அதிரடி படையினர் கண்காணிப்பை மீறி கடந்த 24 ஆம் தேதி நான்கு மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியுடன் வந்து மக்களிடம் தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என மிரட்டல் விடுத்துச் சென்றனர். இது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதனை அடுத்து தண்டர்போல்ட் அதிரடிப்படையின தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டதில் கம்ப மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்தனர்.அதனை அடுத்து மாவோயிஸ்டுகள் மற்றும் அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கி சூடு ஏற்பட்டது. இதில் யாரேனும் சிக்கினார்களா என்பது குறித்த விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu