கடந்த சில தினங்களுக்கு முன்னால், அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி திவாலானது. இதன் எதிரொலியாக சர்வதேச பங்குச் சந்தை ஆட்டம் கண்டது. தற்போது, இந்த வங்கியை, ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் ஷேர்ஸ் வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வங்கியில் உள்ள வைப்புத்தொகை, இதர சொத்துக்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை சுமார் 500 மில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 110 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிலிக்கான் வேலி வங்கிச் சொத்துக்கள், 56 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வைப்புத் தொகை மற்றும் 72 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்கள் ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பேங்க் வசம் செல்ல உள்ளன. மேலும், 72 பில்லியன் டாலர் மதிப்பிலான சிலிக்கான் வேலி வங்கிச் சொத்துக்கள், வெறும் 16.5 பில்லியன் டாலர்களுக்கு, சலுகை விலையில் விற்கப்படுகிறது. மேலும், இன்று முதல், சிலிக்கான் வேலி வங்கியின் 17 கிளைகள், ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் வங்கி சார்பாக இயக்கப்பட்டது.