இந்தியா தலைமையில் உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு

November 23, 2022

இந்தியா தலைமையில் உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தியாவில் அடுத்தாண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் முதல் உச்சி மாநாடு நடைபெறும். மேலும் அடுத்த ஓராண்டில் இந்தியாவில் 200 ஜி-20 மாநாடுகளை நடத்துவதற்கு […]

இந்தியா தலைமையில் உதய்பூரில் முதல் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை கொண்ட ஜி-20 அமைப்பின் 17வது உச்சி மாநாடு சமீபத்தில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இந்தியாவில் அடுத்தாண்டு செப்டம்பர் 9-10ம் தேதிகளில் இதன் முதல் உச்சி மாநாடு நடைபெறும்.

மேலும் அடுத்த ஓராண்டில் இந்தியாவில் 200 ஜி-20 மாநாடுகளை நடத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரையில், இந்தியா தலைமையின் கீழ் ஜி-20 நாடுகளின் முதல் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்த நகரை அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu