கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் அறிமுகம்

September 4, 2024

இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்று, என்டோட் ஃபார்மாகியூடிகல் நிறுவனம் தயாரித்த 'ப்ரெஸ்வு' என்ற புதிய கண் சொட்டு மருந்து இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த மருந்து, நடுத்தர வயதில் ஏற்படும் கண் பார்வை குறைபாடு (ப்ரெஸ்பியோபியா) உள்ளவர்களுக்கு படிக்கும் போது கண்ணாடி அணிவதை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்து 1.25% பைலோகார்பைன் கொண்டிருக்கிறது. பைலோகார்பைன் என்பது தாவரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருள். இது பல ஆண்டுகளாக பல்வேறு கண் பிரச்சனைகள், […]

இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்று, என்டோட் ஃபார்மாகியூடிகல் நிறுவனம் தயாரித்த 'ப்ரெஸ்வு' என்ற புதிய கண் சொட்டு மருந்து இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த மருந்து, நடுத்தர வயதில் ஏற்படும் கண் பார்வை குறைபாடு (ப்ரெஸ்பியோபியா) உள்ளவர்களுக்கு படிக்கும் போது கண்ணாடி அணிவதை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மருந்து 1.25% பைலோகார்பைன் கொண்டிருக்கிறது. பைலோகார்பைன் என்பது தாவரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருள். இது பல ஆண்டுகளாக பல்வேறு கண் பிரச்சனைகள், வறண்ட வாய் மற்றும் உதடு, கண் அழுத்தக் குறைப்பு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் இயற்கையாக ஏற்படும் இந்த கண் பார்வை குறைபாட்டை சரி செய்யும் திறன் கொண்டது. இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த மருந்து விற்பனைக்கு வரும். மருந்தின் விலை ரூ.350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஒரு கண் சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu