ஒடிசா விபத்திற்குப் பிறகு இன்று முதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
ஒடிசா விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து ரெயில் பாதைகளை சீரமைப்பு செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன. விபத்து நடந்து 51 மணி நேரத்திற்கு பின் விபத்து நடந்த தண்டவாளம் வழியாக மீண்டும் சரக்கு ரெயில் சேவை நேற்று இரவு தொடங்கப்பட்டது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் பாதை சீரமைக்கப்பட்டதன் காரணமாக இன்று முதல் ரெயில் சேவை துவங்கி உள்ளது. நேற்று வரை 90 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 56ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் விபத்து நடந்த பாலசோர் பகுதி வழியாக செல்லும் பயணிகள் ரெயில் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறது. இதற்கிடையில் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.