திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஆக முதன்முறையாக திருநங்கை சிந்து பதவியேற்று உள்ளார்.
திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் திறமையால் சாதித்து வருகின்றனர். இதில் சுயதொழில் மட்டும் இன்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் சாதனை புரிந்து வருகின்றனர். அவ்வகையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதராக திருநங்கை சிந்து நேற்று பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இவர் தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்
இவரது சொந்த ஊர் நாகர்கோவிலாகும். இவர் பி. லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளார். மேலும் 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்து தெற்கு ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில் டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து
நேற்று டிக்கெட் பரிசோதகர் ஆக பதவி ஏற்றுள்ளார்.