விமானப்படையில் முதல்முறையாக போர் பிரிவில் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பதவி வகித்து வந்த பெண் அதிகாரிகள் 50 பேர் உத்தரவு பிறப்பிக்கும் உயர் பொறுப்புக்கு சமீபத்தில் முதல்முறையாக பதவி உயர்வு பெற்றனர். இந்நிலையில், விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட் ஆக சேர்ந்து குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்ற பெண் அதிகாரி ஷாலிஸா தாமி விமானப் படையின் முன்கள போர்ப்படை அணியின் தலைமை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக பெண் அதிகாரி ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.