ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீ விபத்து

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது அதில் இருந்த 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் நகரில், ஆக்சி கடற்கரை அருகில் 7 கடல் மைல் தொலைவில் அமைந்த மீன்பிடி படகு நேற்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் தீப்பிடித்தது. இது பற்றி தகவலறிந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மாபெரும் முயற்சியின் மூலம் 18 […]

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்து எரிந்தது அதில் இருந்த 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் நகரில், ஆக்சி கடற்கரை அருகில் 7 கடல் மைல் தொலைவில் அமைந்த மீன்பிடி படகு நேற்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் தீப்பிடித்தது. இது பற்றி தகவலறிந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த மாபெரும் முயற்சியின் மூலம் 18 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிகழ்வின் போது, அந்த வழியாக செல்லும் ரோந்து கப்பல் "சாவித்ரிபாய் புலே" மீனவர்களின் அவசர தேவையை உணர்ந்து, உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது.அனைத்து மீனவர்களும் மீட்கப்பட்டு, மற்றொரு மீன்பிடி படகில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu