இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 6.5% ஆக ஃபிட்ச் நிறுவனம் கணித்திருந்தது. தற்போது இதனை 7% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
வரவிருக்கும் 2025 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7% அளவில் இருக்கும் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட கணிப்பை விட 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 3 காலாண்டுகளாக 8% அளவுக்கு கூடுதலாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி பதிவாகி வருவதை கணக்கிட்டு, இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நிகழாண்டு இறுதியில் இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் 4% அளவுக்கு குறையும் எனவும், குறிப்பாக உணவு பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும் கணித்துள்ளது.