ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்க துறையினர் பண மோசடி வழக்கில் கைது செய்தனர்.
ஹேமந்த் சோரன் நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை காரணமாக அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது ஹேமந்த் சோரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவு இந்நிலையில்
சோரனை காவாலில் எடுத்து அமலாக்கத்துறை சார்பில் விசாரணை செய்வதற்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஹேமந்த் சோ ரனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இவரை சிறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.