அமெரிக்காவில் ஒரே ஆண்டில் ஆறாவது முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. கொலராடோ பகுதியில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 5 பேர் பலியானதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆண்டர்சன் லீ அல்ட்ரிட்ஜ் என்று கண்டறியப்பட்டுள்ளார். அவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு, ஃப்ளோரிடாவில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான விடுதியில் 49 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.