தூத்துக்குடி மற்றும் புற நகர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக விமான சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவைகள் மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வரும் விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வானிலை மீண்டும் சீரானதும் விமான சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.