சென்னையில் கனமழையின் காரணமாக விமான சேவை பாதிப்படைந்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையார், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் ஆகிய இடங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது