போன் பே மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக பிரிந்தன

December 24, 2022

போன் பே மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், அனைத்து விதமான வர்த்தக செயல்பாடுகளில் இருந்தும் தனித்தனியாக பிரிந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தியாவில், இனிமேல் தனித்தனியாக இரு நிறுவனங்களும் தங்களது வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு நிறுவனங்களும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு கீழ் தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பிளிப்கார்ட் குழுமத்தின் தலைவர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, “போன் பே நிறுவனம், இந்தியாவின் நிதித்துறையில், அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, திட்டமிட்டபடி […]

போன் பே மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், அனைத்து விதமான வர்த்தக செயல்பாடுகளில் இருந்தும் தனித்தனியாக பிரிந்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தியாவில், இனிமேல் தனித்தனியாக இரு நிறுவனங்களும் தங்களது வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு நிறுவனங்களும் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு கீழ் தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பிளிப்கார்ட் குழுமத்தின் தலைவர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, “போன் பே நிறுவனம், இந்தியாவின் நிதித்துறையில், அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, திட்டமிட்டபடி அடையும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். போன் பே நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு தனது தலைமையகத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu