பிளிப்கார்ட் நிறுவனம், தனது ஊழியர் நலன் சார்ந்த செலவினங்களுக்கான வரிச் சலுகையை வேண்டி விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்று, பெங்களூருவை சேர்ந்த வரிகள் தீர்ப்பாயம், 1700 கோடி ரூபாயை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம், பயோகான், நோவா நோர்டிஸ்க் ஆகிய நிறுவனங்களுக்கு இதே போன்ற வரி சலுகை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குமாறு தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியாகி ஒரு மாத காலத்திற்கு பின்னர், தற்போது, பெங்களூரு வரிகள் தீர்ப்பாயம் சலுகை தொகையை வழங்கி உள்ளது. இதனை, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.