வரும் ஜூலை மாதம் முதல் துரித வர்த்தக பிரிவில் பிளிப்கார்ட் நிறுவனம் களமிறங்குகிறது. ‘பிளிப்கார்ட் மினிட்ஸ்’ என்ற பெயரில் புதிய துரித வர்த்தக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. துரித வர்த்தக பிரிவுக்குள் நுழைவதற்கு பிளிப்கார்ட் மேற்கொள்ளும் மூன்றாவது முயற்சி இதுவாகும்.
பிளிப்கார்ட் மினிட்ஸ் தளம் மூலம் 15 நிமிடங்களில் பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை பிளிப்கார்ட் வழங்குகிறது. வரும் ஜூலை 15ஆம் தேதி இது தொடங்கப்படலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன், பிளிப்கார்ட் குவிக் என்ற பெயரில் தொடங்கப்பட்ட துரித வர்த்தகம் 90 நிமிடங்களில் விநியோக சேவையை வழங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தவில்லை. தற்போது, பிளிப்கார்ட் மினிட்ஸ், பிளின்கிட், ஜெப்டோ, இன்ஸ்டா மார்ட் போன்ற தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.