நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தூத்துக்குடி வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று மக்களிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து, வெள்ள பாதிப்பு பகுதிகளில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் வெள்ள பாதிப்பு நிவாரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு ரூபாய் 6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 17,000 வழங்கப்படும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடு ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.