மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் புயலின் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 6000 நிவாரணம் நிதி வழங்க அறிக்கை அறிவித்திருந்தது. மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.