மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கபட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகைக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காலை மற்றும் மாலை வேளைகளில் 200 பேர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான கால அவகாசம் 23 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்ததில் தற்போது கடைகளில் கூட்டம் இல்லாத காரணத்தினால் எந்த தேதி குறிப்பிட்டு இருந்தாலும் முன்னதாகவே பணம் வாங்கி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக ரேசன் ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.