மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழைவின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளும் மழை பெய்து வருவதின் காரணமாக நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் கனமழைவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது