வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு போக்குவரத்து தடை

November 24, 2023

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் திண்டுக்கல்,மதுரை மாவட்டங்களில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒரு பாகன பாசன பகுதி விவசாயிகள் நீர் […]

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் திண்டுக்கல்,மதுரை மாவட்டங்களில் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒரு பாகன பாசன பகுதி விவசாயிகள் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எடுத்து வந்தனர். இதனால் அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை பாசன வசதிக்காக நீர் திறக்கப்பட உள்ளது. தற்போது 2000 கண்ணாடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 4000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் கரைகளை தாண்டி தண்ணீர் ஓடியதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எட்டாம் தேதி வரை வைகை அணையில் நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கால்நடைகளை கொண்டு செல்லவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu