காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து 3000 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில மற்றும் தமிழக- கர்நாடகா எல்லை பகுதிகளில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வரத் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நேற்று இரவு எட்டு மணி நிலவரப்படி மூன்றாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி மூன்றாயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கோடைகால சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது