சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற வந்த பாலப் பணிகளின் போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை சாலைகளை இணைக்கும் பறக்கும் ரயில் பணி நடைபெற்று வருகிறது. இதன் பணி ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற வந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ரயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் ஹைட்ராலிக் ஜாக்குகளை பயன்படுத்தி ஏவும் பொழுது கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.