குடவாசல் பகுதியில் உணவுபாதுகாப்புதுறை அலுவலர்கள் மீன்விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் அழுகிய நிலையிலான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து நேற்று முன்தினம் குடவாசல் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளில் உள்ள மீன் விற்பனை கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குடவாசல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 6 கடைகளில் 14 கிலோ அழுகிய நிலையில் இருந்த மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த மீன்களை அழித்தனர். மேலும் இதுபோன்ற அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் மீன் விற்பனையாளர்களிடம் எச்சரித்தனர்.