ராணுவ சேவைகள் பணியாளர் மற்றும் ராணுவ சேவைகள் தொழில்நுட்ப பணியாளர் தேர்வில், முதல்முறையாக ஆறு பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நம் முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ராணுவப்படை வீரர்களுக்கு, டி.எஸ்.எஸ்.சி., எனப்படும், ராணுவ சேவைகள் பணியாளர் பணிக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வை, முப்படைகளைச் சேர்ந்த 22 பெண்கள் உட்பட, 1,500 அதிகாரிகள் எழுதினர். இதில், ஆறு பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதவி உயர்வுகளின் போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த தேர்வில் பெண் அதிகாரிகள் தேர்ச்சி பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.