தீ விபத்து அச்சத்தால் 634,000 SUV களை திரும்பப் பெறும் ஃபோர்டு.

November 25, 2022

தீ விபத்து அச்சத்தினால் ஃபோர்டு கார் நிறுவனம் 634,000 SUV களை திரும்பப் பெறுகிறது. அதாவது SUV களில் உள்ள என்ஜின்கள் இயங்கும் போது, ​​கிராக் செய்யப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை அல்லது எரிபொருள் நீராவியை சூடான மேற்பரப்புகளுக்கு அருகில் குவிப்பதால் வாகனத்தின் அடிப்புறத்தில் தீ ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உலகளவில் 634,000 ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (SUV) திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் கார்களை […]

தீ விபத்து அச்சத்தினால் ஃபோர்டு கார் நிறுவனம் 634,000 SUV களை திரும்பப் பெறுகிறது.

அதாவது SUV களில் உள்ள என்ஜின்கள் இயங்கும் போது, ​​கிராக் செய்யப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை அல்லது எரிபொருள் நீராவியை சூடான மேற்பரப்புகளுக்கு அருகில் குவிப்பதால் வாகனத்தின் அடிப்புறத்தில் தீ ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில்
உலகளவில் 634,000 ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (SUV) திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் கார்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

முன்பு இதேபோல் ப்ரோன்கோ ஸ்போர்ட் மற்றும் 3 சிலிண்டர், 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட எஸ்கேப் எஸ்யூவிகளை வாகனத்தின் எண்ணெய் பிரிப்பான் பகுதிகளில் கசிவு ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் தி௫ம்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி அமெரிக்காவில் சுமார் 520,000 வாகனங்களும் மற்ற நாடுகளில் சுமார் 114,000 வாகனங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதேநேரம் பழுதுபார்ப்பு முடிந்தவுடன், மீண்டும் வாகனங்களை பெற்ற கார் உரிமையாளர்கள், எரிபொருள் உட்செலுத்தியில் கசிவு உள்ளதா என்பதைக் கண்டறிய டீலர்கள் வாகன மென்பொருளைப் புதுப்பிப்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu