ரயில்வே அமைச்சகம் புதிய படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதற்கு .ஐ சி எஃப் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது குறைந்த செலவில் ஐசிஎப் நிறுவனம் வந்தே பாரத் ரயில்களை உருவாக்கி வரும் நிலையில் புதிதாக வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது ஏன்? மேலும் மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை இலவசமாக வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.