வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உடல் நலக்கோளாறினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா திடீரென உடல் நலக்கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அதிகாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் உள்ள வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது, மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அண்மையில் நடந்த வன்முறைக்கு பின், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் வீட்டுக்காவலில் சிறைப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்திவின்பேரில் விடுவிக்கப்பட்டார். கலிதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார்.