ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பண மோசடி வழக்கில் அமலாக்க துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார் ஏழு மணி நேர சோதனைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜார்கண்ட் மாநில ஒரு உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அவசர மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.