சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மான் மீது முன்னாள் உளவுத்துறை அதிகாரி அல் ஜாபிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா போர் பிரகடனம் செய்தது. இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தது. அந்த உத்தரவில் அரசரைப் போல் இளவரசர் முஹம்மது பின் சல்மான் கையொப்பமிட்டு ஆணை பிறப்பித்து இருந்தார். அவர் அரசாணையில் தனது தந்தையின் கையெழுத்தை போலியாக இட்டார். வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத்திறன் பாதிப்படைந்ததால் அதை பயன்படுத்தி இளவரசர் ஹவுதி மீது போர் தொடுத்தார். இளவரசர் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து உள்ளேன். என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார். இந்த அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.