இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
76 வயதான ரணில், 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக அவரது ஸ்டாஃப்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அதிபராக இருந்த ரணில், 6 முறை பிரதமராகவும், 2022 முதல் 2024 வரை அதிபராகவும் பதவி வகித்தவர்.