தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை உயிரிழந்தார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 27-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவிற்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இளங்கோவன் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விலகினார், அவரது மகன் திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பின், இடைத்தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெற்று, சட்டமன்ற கூட்டங்களிலும் தனது தொகுதி பிரச்சனைகளை வலியுறுத்தினார்.