ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி, இந்திய அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். பிரேக்கிங் பாயிண்ட்ஸ் என்ற யூடியூப் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ட்விட்டர் விவரங்களை பகிருமாறு இந்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், சில ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு தெரிவித்ததாக கூறியுள்ளார். அத்துடன், அரசு கோரிய விவரங்களை பகிரவில்லை என்றால், ட்விட்டர் ஊழியர்கள் மீது சோதனைகள் நடத்தப்படும் என்று மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இறுதியில், இந்தியாவில் ட்விட்டருக்கு தடை விதிக்கப்படும் என்று இந்திய அரசு எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். ஜாக் டோர்சியின் இந்த குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.