மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஆக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டசபையில் சபாநாயகர் ஆக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.