ஆப்கானிஸ்தானில் கனமழை பெய்ததில் 40 பேர் பலியாகினர். 350 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதில் 40 பேர் பலியாகினர். 350 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான நங்காரஹாரின் பல்வேறு பகுதிகளில் 400 வீடுகள் சேதம் அடைந்தன. சுமார் 60 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து உதவி நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.
இது குறித்து பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜமன் அமர் கூறுகையில், இந்த கன மழையில் படுகாயம் அடைந்தவர்கள் ஜலாலாபாக் மாகாணத்தின் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மே மாதம் கனமழையால் பாக்லான் மாகாணம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் 300-க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தனர்.