குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் பழமை வாய்ந்த பாம்பின் புதைப்படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீளமான பாம்பு புதை படிவங்களில் இது ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு வாசுகி என பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 15 மீட்டர் நீளம் உடைய பாம்பு புதை படிவம் குஜராத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை பாம்புக்கு வாசுகி இன்டிகஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்து சமய புராணங்களில் வரும் வாசகி பாம்பை நினைவுகூர்ந்தும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாலும் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தற்காலத்தில் காணப்படும் நல்ல பாம்பின் தோற்றத்தை ஒத்திருப்பதாக கூறுகின்றனர். சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகை பாம்புகள் வாழ்ந்ததாகவும். 12000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.