தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை ரூபாய் 1000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலத்திட்டங்களை சீராக செயல்படுத்தும் நோக்கில் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த நாட்களில் கோவை, விருதுநகரில் நடந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, அவர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பார்வையிடுவார். குறிப்பாக, அரியலூரில் ரூ.1,000 கோடி முதலீட்டுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமம் காலணி உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஏற்பாடாக இருக்கின்றது. முதல்வர், 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து உறுதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைக்கவும், பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.