ஆப்கானிஸ்தான் துப்பாக்கிசூடு - 4 பேர் பலி

May 18, 2024

ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உட்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் அங்கு அவ்வப்போது ஆயுதமேந்திய கும்பல் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக தற்கொலை படை தாக்குதல் நடைபெறுகிறது. துப்பாக்கி சூடு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த […]

ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உட்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் அங்கு அவ்வப்போது ஆயுதமேந்திய கும்பல் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக தற்கொலை படை தாக்குதல் நடைபெறுகிறது. துப்பாக்கி சூடு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த சூழலிலும் ஆப்கானிஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்தே வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று நேற்று துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் உட்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அப்துல் கானி கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், குற்றம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu