தமிழகத்தில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில், பாக்ஸ்கான் நிறுவனம், புதிய ஆலை ஒன்றை கட்டமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. திங்கட்கிழமை வெளியான தமிழக அரசின் அறிவிப்புக்கு, பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக, பாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் என்ற நிறுவனம், “தமிழக அரசுடன் எந்த ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை; எந்த முதலீடும் செய்யும் திட்டம் இல்லை” என தெரிவித்தது. அதன்படி, பாக்ஸ்கான் நிறுவனம், தமிழ்நாடு முதலீட்டு திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால், தமிழக அரசு, இன்று இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தின்படி, “பாக்ஸ்கான் ஹான் ஹாய் என்ற நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாக்ஸ்கான் என்ற பெயர் பொதுவாக அமைந்துள்ளதால் இந்த குழப்பம் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில் ஆலை அமைக்க உள்ள நிறுவனம் பாக்ஸ்கான் இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் அல்ல; அது பாகிஸ்தான் ஹான் ஹாய் ஆகும்” என தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலை அமைக்கப்படவுள்ளதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.