தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், மின்னணு உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரிக்கும் ஆலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இந்த ஆலை சென்னைக்கு அருகில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, கடந்த வாரம், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இதர அரசு அதிகாரிகளுடன் பாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்படி, முதற்கட்டமாக 180 மில்லியன் முதல் 200 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் அமைக்க உள்ள ஆலை 2024 ஆம் ஆண்டு முழுமை அடையும் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலையில், தகவல் தொடர்பு, கைபேசி இணைப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவைப்படும் மின்னணு உபகரணம் தயாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பாகங்களை இணைக்கும் ஆலை ஒன்றை, பாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் இயக்கி வருகிறது. அந்த வகையில், புதிதாக மற்றொரு ஆலை அமைக்கப்பட உள்ளது.