ஐரோப்பாவைச் சேர்ந்த பிரபல சிப் உற்பத்தியாளரான எஸ் டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் (எஸ்டிஎம்) நிறுவனத்துடன் இணைந்து, செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் ஈடுபட பாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக, இந்தியாவில் செமி கண்டக்டர் சிப் உற்பத்தி ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனங்கள் கூட்டணியில் பாக்ஸ்கான் முக்கிய பங்குதாரராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸ்கான் - வேதாந்தா கூட்டமைப்பை தவிர, மேலும் 5 செமி கண்டக்டர் உற்பத்தி திட்டங்கள் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், இஸ்ரேலின் டவர் செமி கண்டக்டர் உடன் இணைந்து நெக்ஸ்ட் ஆர்பிட் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்தில் இந்திய அரசு 50% செலவுகளை ஏற்பதாக கூறியுள்ளது. எனவே, இந்த திட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டமைப்பு, இந்திய அரசிடம் இருந்து 10 பில்லியன் டாலர் மதிப்பில், திட்ட சலுகைகளை எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.