பிரான்ஸ் - பாரிஸ் வன்முறையில் 250 காவலர்கள் காயம் - 800 பேர் கைது

June 30, 2023

இரு தினங்களுக்கு முன்னர், பிரான்ஸ் நாட்டில், 17 வயது சிறுவன் ஒருவனை போக்குவரத்து காவலர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம், பாரிசில் வன்முறையை தூண்டி உள்ளது. இரு தினங்களுக்கும் மேலாக பாரிஸ் நகரில் வன்முறை நீடித்து வருகிறது. இந்த கிளர்ச்சியில், 250 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பாரிசில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் புரூசெல்ஸ் […]

இரு தினங்களுக்கு முன்னர், பிரான்ஸ் நாட்டில், 17 வயது சிறுவன் ஒருவனை போக்குவரத்து காவலர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம், பாரிசில் வன்முறையை தூண்டி உள்ளது. இரு தினங்களுக்கும் மேலாக பாரிஸ் நகரில் வன்முறை நீடித்து வருகிறது. இந்த கிளர்ச்சியில், 250 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், பாரிசில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் புரூசெல்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இதுவரை 875 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 18 வயது உடையவர்கள் எனவும் கூறப்படுகிறது. அத்துடன், போராட்டக்காரர்கள், அரசாங்க கட்டிடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதாக தகவல் வெளியானதால், காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாடு முழுவதுமே இந்த வன்முறையால் பதற்றம் அடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu