வடகொரியாவின் அணுசக்தி நிலைப்பாடு கொள்கைக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

September 13, 2022

வடகொரியாவானது நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல்கள் நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவானது கோவிட் -19 பரவியதற்கு சியோலைக் குற்றம் சாட்டியதோடு இந்த ஆண்டு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பு தாக்குதல்களை அனுமதிக்கும் சட்டத்தை பியோங்யாங் இயற்றியது. அதை தொடர்ந்து நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல்கள் […]

வடகொரியாவானது நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல்கள் நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவானது கோவிட் -19 பரவியதற்கு சியோலைக் குற்றம் சாட்டியதோடு இந்த ஆண்டு ஆயுத சோதனைகளை நடத்தியது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்
தடுப்பு தாக்குதல்களை அனுமதிக்கும் சட்டத்தை பியோங்யாங் இயற்றியது. அதை தொடர்ந்து நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களுக்கு பதிலடியாக அணு ஆயுதத் தாக்குதல்கள் நடைபெறும் என்று வடகொரியா அறிவித்தது. இதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது வட கொரிய அதிகாரிகளின் இந்த முடிவானது சர்வதேச, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிரான்ஸ் அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் வடகொரியாவின் இந்த நடவடிக்கையானது அணு ஆயுத ஒழிப்பு கொள்கையை சாத்தியமற்றதாக்குகிறது எனவும் கூறினார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu