பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் ராஜினாமா

July 8, 2024

பெரும்பான்மை இழந்த மறுமலர்ச்சி கட்சியை சேர்ந்த பிரான்ஸ் பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். பிரான்சில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்றில் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான நியூ பாப்புலர் முன்னணி முன்னிலை வகித்துள்ளது. மொத்தம் உள்ள 577 […]

பெரும்பான்மை இழந்த மறுமலர்ச்சி கட்சியை சேர்ந்த பிரான்ஸ் பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

பிரான்சில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்றில் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான நியூ பாப்புலர் முன்னணி முன்னிலை வகித்துள்ளது. மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 182 தொகுதிகளை இது கைப்பற்றியுள்ளது. அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி 168 இடங்களில் வென்றுள்ளது. முதல் கட்ட தேர்தலில் முன்னிலை வகித்த வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி 143 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

பிரான்சில் தற்போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க 289 இடங்கள் தேவைப்படுகிறது. இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே மேக்ரான் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் பெரும்பான்மை இழந்த மறுமலர்ச்சி கட்சியை சேர்ந்த பிரான்ஸ் பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu