நேதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்ட் கோரிக்கையை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகள் ஆதரித்துள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் கரீம் கான் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கோரிக்கைக்கு இஸ்ரேலிய பிரதமர், அதிபர் பைடன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு தங்களை காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று பைடன் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை யூத விரோத செயலாகும் என்று இஸ்ரேலிய தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா போரில் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் மதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பெல்ஜியம் வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லாபிப் கூறுகையில், காசாவில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.