காரை நிறுத்தாத பதின்வயது இளைஞரை சுட்டுக் கொன்ற காவல் துறை - பாரிசில் வன்முறை

June 28, 2023

பாரிசில் 17 வயது சிறுவன் ஒருவன், போக்குவரத்து காவலர்கள் காரை நிறுத்த சொன்ன போது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளார். இதற்காக காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பாரிசில் பெரும் வன்முறையை தூண்டி உள்ளது. பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வன்முறையில் களமிறங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில், போக்குவரத்து காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். அத்துடன், கடந்த வருடம் இதே போன்று 13 […]

பாரிசில் 17 வயது சிறுவன் ஒருவன், போக்குவரத்து காவலர்கள் காரை நிறுத்த சொன்ன போது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளார். இதற்காக காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பாரிசில் பெரும் வன்முறையை தூண்டி உள்ளது. பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வன்முறையில் களமிறங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில், போக்குவரத்து காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். அத்துடன், கடந்த வருடம் இதே போன்று 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நாகேல் என்ற பதினேழு வயது இளைஞர், துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வெளியான காணொளியில், காவல்துறை அதிகாரி ஒருவர் கார் டிரைவரை நோக்கி துப்பாக்கியால் குறி பார்பதும், அதன் பிறகு கார் நொறுங்கி உருக்குலைந்ததும் காட்டப்பட்டுள்ளது. இது பெரிய அளவில் வன்முறையை தூண்டி உள்ளதால், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையில் ஈடுபட்டதற்காக, 31 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu