பங்கு சந்தையில் மோசடி- அதானி நிறுவனத்துக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

February 15, 2023

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. அதானி குழும மோசடி விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற கூட்டுக் குழு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் […]

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது.

அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. அதானி குழும மோசடி விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற கூட்டுக் குழு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கின. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்கும், செபிக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த மனுவை அளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 17ம் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu