மாநகரப் போக்குவரத்து கழகங்களில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன. 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்ய இதற்கு முன்னதாக மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் பயண டோக்கன் வழங்கப்பட்டன. மேலும் அடுத்த அரையாண்டுக்கு ஒரு மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில்
21.12.2023 முதல் 31.01.2024 வரை வழங்கப்பட உள்ளது. அதற்கு பின்னர் 01.02.2024 முதல் அந்தந்த பணிமனைகளில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்க பட உள்ளது.
இதற்காக இருப்பிட சான்றாக குடும்ப அட்டை நகல், வயது சான்றாக ஆதார் அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ கல்வி சார்ந்த அடையாள அட்டை நகல்/ மற்றும் இரண்டு வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டத்தின் பயன்பெற்று வரும் மூத்த குடிமக்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது